பேக்கரி கடை  தீ விபத்து ரூ. 7 லட்சம் பொருட்கள் சேதம்.

by Editor / 06-05-2025 10:35:14am
பேக்கரி கடை  தீ விபத்து ரூ. 7 லட்சம் பொருட்கள் சேதம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், (50); இவர் சங்கராபுரம் -தேவபாண்டலம் சாலையில், தகர ஷட் அமைத்து பேக்கரி கடை நடத்தி வருகிறார்.நேற்று இரவு 10 மணிக்கு கடையை முடிவிட்டு முருகன் வீட்டிற்குச் சென்றுள்ளார்.நள்ளிரவு 12:00 மணி அளவில் கடையினுள் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியயதாக கூறப்படுகிறது.அப்போது காற்று வேகமாக வீசியதால்தீ மௌமெளவென பரவி பக்கத்தில்,தேவபாண்டலத்தைச் சேர்ந்த சக்திவேல்,(52); என்பவருக்குச் சொந்தமான டயர்ரீடிரேடிங் கடையிலும் தீ பிடித்தது.தகவலறிந்து வந்த சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தினர் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பேக்கரி கடையில் இருந்த டேபிள்கள், சேர், பிரிட்ஜ் உட்பட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலும், டயர் கடையில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலும் பொருட்கள் எரிந்து சேதமானது. சங்கராபுரம் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : பேக்கரி கடை  தீ விபத்து ரூ. 7 லட்சம் பொருட்கள் சேதம்.

Share via