அடுத்தவர்களால் திருட முடியாத சொத்து கல்விதான் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Staff / 19-04-2022 01:02:14pm
அடுத்தவர்களால்  திருட முடியாத சொத்து கல்விதான்  முதலமைச்சர் மு க ஸ்டாலின்

தமிழகத்தில் அரசுப் பள்ளி களில் செயல்படும் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்வதற்கான நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் யாராலும் திருட முடியாத சொத்துக்கள்கல்விதான் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பெண்கள்  அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்தவர் பள்ளி பருவத்தில் மாணவர்கள் முறையாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். அரசு பள்ளிகள் தன்னிறைவு பெறுவதோடு அனைவருக்கும் தரமான சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via