ஆன்லைன் சூதாட்டம்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

by Staff / 08-01-2024 01:05:46pm
ஆன்லைன் சூதாட்டம்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்


ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான எக்ஸ் பதிவில், சென்னை மேடம்பாக்கத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் சைதன்யா, ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால், தமது 8 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, தாமும் தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறார். கடந்த சில நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் இரு உயிர்கள் பலியாகிவிட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via