தலைவிரித்து ஆடும் குடிநீர் பஞ்சம்..
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள கோஷிம்பாடா கிராம மக்கள் குடிநீருக்காக போராடி வருகின்றனர். கோடை வெயில் நாடு முழுவதும் வாட்டி வதைக்கிறது. மக்கள் வெப்ப அலையால் நாள்தோறும் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், நாசிக்கில் மக்கள் குடிநீர் கிடைக்காமல் பல மைல் தூரம் சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அப்பகுதியில் உள்ள பெரிய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தினமும் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags :