நிலச்சரிவில் 15 பேர் காயம்
நிலச்சரிவில் சிக்கி 15 பேர் காயமடைந்தனர். கொலம்பியாவில் உள்ள பெனால் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாலையில் மக்கள் நடந்து சென்றபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்டதும் மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Tags :