எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

by Admin / 11-12-2023 01:18:41pm
 எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் திருவுருவச் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை

மகாகவி பாரதியார் 142-வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க வடக்கு மாவட்டம் சார்பில் எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் திருவுருவச் சிலைக்கு எட்டயபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலையில், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பாரதியாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

.. நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ்,பால்ராஜ்,மகேஷ், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் அம்பிகை பாலன், இலக்கியப் பிரிவு மாவட்ட செயலாளர் போடு சாமி, கோபி, முருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாரதியாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

Tags :

Share via