அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி

by Staff / 14-04-2024 01:11:03pm
அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி

கேரளாவின் வயநாடு வைத்திரியில் அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதில் காரில் பயணம் செய்த மலப்புரத்தைச் சேர்ந்த அமீனா மற்றும் அவரது குழந்தைகள் ஆதில், அப்துல்லா ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று காலை 6 மணியளவில் நடந்துள்ளது. காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இருந்தனர்.கோழிக்கோடு நோக்கிச் சென்ற கார், திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதியது. விபத்து நடந்த உடனேயே, காயமடைந்தவர்கள் மற்ற வாகனங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் மூவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

 

Tags :

Share via