அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள் கட்டுவோம்: பிரதமர்

by Staff / 14-04-2024 01:08:24pm
அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள் கட்டுவோம்: பிரதமர்

மக்களவை பொதுத்தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு இன்று பிரதமர் மோடி பேசினார். தங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும், மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அறிவித்தார். வரும் நாட்களில் வீடுகள் தோறும் குழாய்கள் மூலம் எரிவாயு வழங்கப்படும் என்றும் பிரதமர் சூர்யாகர் திட்டத்தில் ஒரு கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் வீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் விற்பனை செய்யலாம் என அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories