திருக்குவளை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Editor / 07-07-2021 02:13:33pm
திருக்குவளை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் திருக்குவளைக்குச் சென்றுள்ளார்.

நேற்று திருவாரூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை காட்டூரில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த அவர், மருத்துவமனை வளாகத்தில் பச்சிளங் குழந்தைகள் மற்றும் மகப்பேறு சிகிச்சைக்கான தனிக் கட்டடத்தை திறந்து வைத்தார்

இதையடுத்து, கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளைக்குச் சென்றார். திருக்குவளையில் உள்ள கருணாநிதி இல்லத்தில் உள்ள முத்துவேலார்- அஞ்சுகம் அம்மாள் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் அங்குள்ள கருணாநிதி, முரசொலி மாறன் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து கருணாநிதி இல்லத்தில் உள்ள புகைப்படங்களை பார்வையிட்டார். அப்போது முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், பேரன், பேத்திகள் உடனிருந்தனர்.

 

Tags :

Share via