நிலச்சரிவில் இருந்து தப்பிக்க 20 மணிநேரம் பிரிட்ஜில் இருந்து உயிர் பிழைத்த சிறுவன்

by Staff / 22-04-2022 01:49:47pm
நிலச்சரிவில் இருந்து தப்பிக்க 20 மணிநேரம் பிரிட்ஜில் இருந்து உயிர் பிழைத்த சிறுவன்

பிலிப்பைன்ஸ் மெகி  புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து தப்பிக்க ப்ரிட்ஜுக்குள் நுழைந்து கொண்ட சிறுவன் பாத்திரமாக உயிர் தப்பியுள்ளார் கிட்டத்தட்ட 20 மணிநேரம் பிரிட்ஜில் இருந்ததாக கூறப்படுகிறது.லேயிட்  மாகாணத்திலுள்ள பேபி நகரத்தில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இருந்து தப்பித்துக்கொள்ள சிஜே ஜஸ்மே  என்ற 11 வயது சிறுவன் தனது வீட்டில் இருந்தபிரிட்ஜிக்குள்  சென்று நுழைந்து கொண்டு உள்ளான். மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது குளிர்சாதனப் பெட்டி ஒன்று கிடந்ததை பார்த்த மீட்பு படையினர் அதைத் திறந்து பார்த்தபோது உள்ளே சிறுவன் இருப்பதை கண்டுபிடித்தனர். நிலச்சரிவில் சிறுவன் தாய் மற்றும் சகோதரனை மாயமாகி இருப்பதாகவும் சிறுவனின் தந்தை உயிரிழந்து இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via