பொழுதுபோக்குத் துறையில் அதிக வரி செலுத்துபவர் என்ற பெருமையை மீண்டும் பெற்றார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்

by Editor / 25-07-2022 01:52:08pm
பொழுதுபோக்குத் துறையில் அதிக வரி செலுத்துபவர் என்ற பெருமையை மீண்டும் பெற்றார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்

 பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பொழுதுபோக்குத் துறையில் அதிக வரி செலுத்துபவர் என்ற பெருமையை மீண்டும் பெற்றுள்ளார். இதற்கான பாராட்டு சான்றிதழ்கள் வருமான வரித்துறை அவருக்கு வழங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக அதிக வரி செலுத்துபவர் என்ற பெருமையை அக்ஷய்குமார் தக்க வைத்துள்ளார். தற்போது இங்கிலாந்தில் படப்பிடிப்பில் உள்ளதால் வருமானவரித்துறை பாராட்டு சான்றிதழ் அவர் தரப்பில் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. தமிழக புதுச்சேரி மண்டலத்தில் அதிக வருமான வரி செலுத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் அறிவிக்கப்பட்ட விருது அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

 

Tags :

Share via