ஹரித்துவாரில் கன்வர் யாத்திரைக்கு திரண்ட பல்லாயிரக்கணக்கானோர் மலர்தூவி இஸ்லாமியர்கள் மரியாதை
கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட கன்வர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில் யாத்திரையின் ஒருபகுதியாக ஹரித்வாரில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் மீது மத நல்லினக்கணம் கொண்ட இஸ்லாமியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆண்டுதோறும் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை கண்வர் யாத்திரை மேற் கொள்ளப்படுகிறது இந்த யாத்திரை மேற்கொள்ளும் சிவபக்தர்கள் கன்வாரியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஹரித்துவர் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்று கங்கை நீரை எடுத்து வரும் பக்தர்கள் தங்கள் ஊர்களில் உள்ள ஆலயங்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் நடத்துவார்கள்.
Tags :