கால்வாயில் விழுந்த கார் - 5 பேர் நீரில் மூழ்கி பலி

by Staff / 08-11-2023 12:35:27pm
கால்வாயில் விழுந்த கார் - 5 பேர் நீரில் மூழ்கி பலி

கர்நாடக மாநிலம் பாண்டவபுரா அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் விழுந்ததில் அதில் பயணித்த 5 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கால்வாயில் கார் கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்டனர். மைசூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் உறவினர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via