மொட்டை அடித்து ராகிங் - 7 சீனியர் மாணவர்கள் கைது
கோவை, பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில், சீனியர் மாணவர்கள், முதலாம் ஆண்டு ஜூனியர் மாணவரிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மாணவர் பணம் கொடுக்காததால், அவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சீனியர் மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வித்துறை சார்பில் ராகிங் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :