பொன்முடியின் தொகுதி காலி என அறிவிக்க வேண்டும்

by Staff / 01-03-2024 05:16:29pm
பொன்முடியின் தொகுதி காலி என அறிவிக்க வேண்டும்

சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவிகளை முன்னாள் அமைச்சர் பொன்முடி இழந்துள்ளார். மேலும் இந்த தீர்ப்பின் மீதான மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டும் என, சட்டப்பேரவை செயலாளரிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via