போதைப்பொருள் விற்போரின் சொத்துகள் பறிமுதல்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்கவும், பறிமுதல் செய்யவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இந்த பிரிவு, அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் உருவாக்கப்பட்டு தீவிரமாக செயல்படும். மேலும், போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க பிரத்யேக இணையதளத்தையும் அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
Tags :



















