புழல் சிறை கைதிக்கு திடீர் மாரடைப்பு
புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தவர் சீனிவாசன். இவருக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் இவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, புழல் சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், புழல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :