கார்மோதி தலைமைக்காவலர் பலி,தனிப்பிரிவு காவலர் உள்ளிட்டோர் படுகாயம்.

by Editor / 12-10-2022 09:43:47pm
கார்மோதி தலைமைக்காவலர் பலி,தனிப்பிரிவு காவலர் உள்ளிட்டோர் படுகாயம்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவர் மருதுபாண்டியன் மற்றும் சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் சுந்தரய்யா, ஆகியோர் சொக்கம்பட்டி காவல் நிலையத்திலிருந்து புளியங்குடி காவல் நிலையம் நோக்கி இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது புளியங்குடி வம்சவிருத்தி நகர் பகுதியில் சென்ற பொழுது மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் குற்றாலத்தில் குளித்து விட்டு மதுப்போதையில் காரை இயக்கி உள்ளார். அப்பொழுது  வம்சவிருத்தி நகர் அருகே மருதுபாண்டியன், சுந்தரய்யா மற்றும் அரவிந்த் என்கின்ற ஒரு நபரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வேகமாக சென்ற கார் இவர்கள் மீது மோதியது இதில் தலைமை காவலர் சுந்தரய்யா தனிப்பிரிவு காவலர் மருதுபாண்டியன், அரவிந்த் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனங்களில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்இவ்ந்த விபத்தில்  சுந்தரய்யா பலத்த காயம் அடைந்தார். மேலும் மருதுபாண்டியனும்  காயமடைந்தார் இவர்கள் மூன்று நபர்களையும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்று முதலுதவி வழங்கப்பட்டு அங்கிருந்து பாளையங்கோட்டை மாவட்ட மருத்துவமனைக்கு  கொண்டு செல்லும் பொழுது தலைமைக்காவலர் சுந்தரய்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். மருதுபாண்டியன்,அரவிந்த் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து புளியங்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via