வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து விவசாயி சாவு
தக்கலை அருகே உள்ள தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 59), வாழை விவசாயி.
இவர் இன்று காலை தோட்டத்திற்கு புறப்பட்டார். அப்போது வாழையை பொதிய வைப்பதற்காக வல்லம் என்ற கருவி தேவைப்பட்டது. வீட்டின் மாடியில் இருந்த அதனை எடுப்பதற்காக கிருஷ்ணன் சென்றார்.
மாடியில் இருந்த வல்லத்தை எடுத்துவிட்டு அவர் நகர்ந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். மாடியில் இருந்து வீட்டின் வெளிப்பகுதியில் அவர் விழுந்தார்.இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தனர். அங்கு ரத்தவெள்ளத்தில் கிருஷ்ணன் பரிதாபமாக இறந்து கிடந்தார் சம்பவம் குறித்து தக்கலை போலீசில் கிருஷ்ணனின் மனைவி நாகம் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து கிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணனுக்கு 2 மகள்கள் உள்ளனர் அவர்களுக்கு திருமணமாகி விட்டது.
Tags :