பாகிஸ்தான் ஏஜென்டுக்கு ரகசிய தகவல்: டிஆர்டிஓ விஞ்ஞானி கைது

by Staff / 05-05-2023 01:05:18pm
பாகிஸ்தான் ஏஜென்டுக்கு ரகசிய தகவல்: டிஆர்டிஓ விஞ்ஞானி கைது

டிஆர்டிஓ விஞ்ஞானி ஒருவர் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையால் (ஏடிஎஸ்) கைது செய்யப்பட்டுள்ளார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் பிரதீப் குருல்கர் புனேவில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் உளவுத்துறையின் ஏஜென்டுக்கு தகவல் கசிந்ததாக மகாராஷ்டிர ஏடிஎஸ் கூறுகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2022-க்கு இடையில் வாட்ஸ்அப் மற்றும் வீடியோ அழைப்பு மூலம் விஞ்ஞானி பாகிஸ்தான் ஏஜென்டுடன் தொடர்பில் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. டிஆர்டிஓவிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via