தமிழக மக்கள் இரண்டாம் தர குடிமக்களா - கனிமொழி கேள்வி
மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் வரிப்பதிர்வை நேற்று விடுவித்தது குறித்து, மக்களவை உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், தமிழகம் பெறுவது ரூ. 5,797 கோடி வரிப் பகிர்வு, இது கிட்டத்தட்ட இரு மாநிலங்களும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருந்தாலும், உத்தரப் பிரதேசத்தை விட 20,000 கோடி ரூபாய் குறைவு. தமிழக மக்கள் ஏன் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags :