கிரென் கவிழ்ந்து 4 பேர் பலி

by Editor / 23-01-2023 08:42:47am
கிரென் கவிழ்ந்து 4 பேர் பலி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நெமிலி வட்டம் கீழ்வீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் தற்போது நடைபெற்று வந்த மயிலேறு திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நான்குபேர் பலியாகினர் இதில் பலர் காயமடைந்துள்ளனர்.

அந்த கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது கிரேனில் தொங்கியபடி சுவாமிக்கு மாலை அணிவிக்க பக்தர்கள் முயற்சி செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து, விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில்  பூபாலன்(39), முத்து(42), ஜோதிபாபு(17) உள்ளிட்ட 4பேர் உயிரிழந்துள்ளனர்.8க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.

 

Tags :

Share via