தேர்தல் ஆணையம் ஷிண்டே அணிக்கு ஆதரவாக செயல்படுகிறது

by Staff / 13-10-2022 04:52:21pm
தேர்தல் ஆணையம் ஷிண்டே அணிக்கு ஆதரவாக செயல்படுகிறது

தேர்தல் ஆணையம் ஷிண்டே அணிக்கு ஆதரவாக செயல்படுகிறது: தாக்கரே தரப்பு குற்றசாட்டு
அந்தேரி தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் உத்தவ் தாக்கரே அணிக்கு 'தீப்பந்தம்' சின்னத்தை ஒதுக்கியது. மேலும் அவர்களின் அணிக்கு 'சிவசேனா- உத்தவ் பாலாசாகேப் தாக்கரே' பெயர் வழங்கப்பட்டது. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் 'இரட்டை வாள்-கேடயம்' சின்னம் ஒதுக்கி உள்ளது.'பால்தாக்கரேவின் சிவசேனா' என்ற பெயரை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கியது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் எடுத்த முடிவில் பக்கச்சார்பு இருப்பதாக தாக்கரே குழு குற்றம் சாட்டியுள்ளது.இது குறித்து தாக்கரே தரப்பு, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

 

Tags :

Share via