பாலியல் துன்புறுத்தல்: மல்யுத்த வீரர்கள் போராட்டம்

by Staff / 24-04-2023 03:21:59pm
பாலியல் துன்புறுத்தல்: மல்யுத்த வீரர்கள் போராட்டம்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாரில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக் கூறி இன்று 2வது நாளாக டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, கடந்த ஜனவரியில் பரபரப்பு புகார் எழுந்தது. தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி வீரர்கள் வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், சங்கீதா போகத் உட்பட ஒட்டுமொத்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளும் பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via