ஜப்பானை மிரட்டும் நான்மடோல் புயல்

ஜப்பானில் சக்தி வாய்ந்த புயல் கரையை கடப்பதால் கடலோரத்தில் வசித்த ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கியூஷூ தீவில் உள்ள ககோஷிமா நகரை நேற்று சக்தி வாய்ந்த நான்மடோல் புயல் கரையை கடந்து, வடக்கு நோக்கி நகர்வதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மணிக்கு 162 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியது. எனவே, கடலோரப் பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். ஜப்பானில் பலத்த காற்றுடன் ராட்சத அலை ஏழும் வீடியோ வைரலாகி வருகிறது.
Tags :