முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு  சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முழு உருவ கம்பீரச் சிலை 

by Editor / 25-06-2023 09:50:51pm
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு  சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முழு உருவ கம்பீரச் சிலை  சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை நிறுவப்படும் என110 விதியின் கீழ் சட்டப்பேரவையில்  கடந்த ஏப்ரல் 20ம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “உத்திரப் பிரதேச மாநில முதல்வராகவும், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்து, பின்னர் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989ம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் ஆனவர் வி.பி.சிங். இத்தகைய பெருமை மிக்க சமூக நீதிக் காவலர்’ வி.பி.சிங்கிற்கு முழு உருவ கம்பீரச் சிலை நிறுவப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags :

Share via