மாணவர்களுக்கு வாந்தி – மயக்கம்
கன்னியாகுமரி அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாமில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தனியார் கேட்டரிங் சர்வீஸில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது. 16 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :