3 மாவட்ட செயலாளர்கள் ம.தி.மு.க.வில் இருந்து அடியோடு நீக்கம் - பொதுச்செயலாளர் வைகோ நடவடிக்கை.

by Editor / 23-05-2022 08:22:02pm
3 மாவட்ட செயலாளர்கள்  ம.தி.மு.க.வில் இருந்து அடியோடு நீக்கம் - பொதுச்செயலாளர் வைகோ   நடவடிக்கை.

3 மாவட்ட செயலாளர்கள்  ம.தி.மு.க.வில் இருந்து அடியோடு நீக்கம் - பொதுச்செயலாளர் வைகோ அதிரடி நடவடிக்கை. 

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செவந்தியப்பன் சிவகங்கை மாவட்ட செயலாளராகவும், சண்முக சுந்தரம் விருதுநகர் மாவட்ட செயலாளராகவும், செங்குட்டுவன் திருவள்ளூர் மாவட்ட செயலாளராகவும் இருந்தனர்.

இவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து, தலைமைக் கழகம் தாயகத்தில், 11.05.2022 அன்று காலை 11 மணிக்கு, நடைபெறுவதாக இருந்தது.

ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு நேரில் வந்து மூவரும் விளக்கம் அளிக்காமல், ஒழுங்கு நடவடிக்கைக் குழு தங்களை விசாரிக்க, தார்மீக உரிமை இல்லை என்று கூறி கடிதம் அனுப்பி இருந்தனர்.

ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான மேற்கண்ட மூவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை புகார்கள் மற்றும் அவர்கள் எழுதிய கடிதங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும், கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆராய்ந்தது.

அதன் அடிப்படையில், ஒழுங்கு நடவடிக்கைக் குழு அளித்துள்ள பரிந்துரை மற்றும் கழக சட்டதிட்ட விதிகளின்படி, புலவர் சே.செவந்தியப்பன், ஆர்.எம். சண்முகசுந்தரம், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகியோர், ம.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் மற்றும் கழகத்தில் அவர்கள் வகித்து வரும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகின்றார்கள் என்று, இதன் மூலம் அறிவிக்கப்படுகின்றது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : 3 District Secretaries sacked from MDMK - General Secretary Vaiko action.

Share via