பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: கணவர் உட்பட 3பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள அல்லிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் குணா என்ற பொன் தங்கம் (35). இவரது மனைவி அமராவதி(28). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். அமராவதி மகளிா் குழுவில் தலைவியாக உள்ளார். அவர் பல்வேறு இடங்களுக்குச் சென்று வருவதை குணா கண்டித்தாராம். இதனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் இருவரும் பிரிந்து வாழ்ந்தனா்.
விவாகரத்துக்கும் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனராம். இந்நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மகளிா் திட்டம் சாா்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்றுவிட்டு, அமராவதி தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
பின்னர் அமராவதியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில், பலத்த காயமடைந்த அமராவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி கொலை முயற்சி வழக்குப் பதிந்து, அவரது கணவர் ஸ்ரீவைகுண்டம் பிச்சனார் தோப்பைச் சேர்ந்த முத்துராஜ் மகன் பொன்தங்கம் என்ற குணா (25), அவரது அண்ணன் முருகன் என்ற மருது (27), உறவினர் முனியன் மகன் வள்ளி (23) ஆகிய 3பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags :