நாடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக வெற்றிபெறும்: சசிகலா

by Staff / 19-10-2023 01:22:46pm
நாடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக வெற்றிபெறும்: சசிகலா

சென்னை வேளச்சேரியில் அ. தி. மு. க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சசிகலா கலந்து கொண்டு பேசினார்.தமிழக மக்களை காப்பாற்ற எம். ஜி. ஆர். 51 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா உருவம் பதித்த கொடியை தாங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார் என்று தெரிவித்தார்.தி. மு. க. தலைவர் வாய் கூசாமல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஒரு பொய்யை சொல்லி மக்களின் காதில் பூ சுத்தப் பார்க்கிறார் என்று கூறிய சசிகலா, வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அ. தி. மு. க. மாபெரும் வெற்றிபெறும். அதற்காக அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்தார்.தமிழக மக்களின் வாழ்வு மலர, நம் இருபெரும் தலைவர்கள் காட்டிய அதே வழியில் தமிழகத்தில் பொற்கால ஆட்சியை அமைத்து காட்டுவோம் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

 

Tags :

Share via