திருச்செந்தூர்,  சுரண்டைக்கு நகராட்சி அந்தஸ்து: அமைச்சர் பெரியகருப்பன்

by Editor / 24-08-2021 03:48:02pm
திருச்செந்தூர்,  சுரண்டைக்கு நகராட்சி அந்தஸ்து: அமைச்சர் பெரியகருப்பன்

 

திருச்செந்தூர்,  சுரண்டைக்கு நகராட்சி அந்தஸ்து மற்றும் புதிதாக 5 மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.


மாநகராட்சியாக தாம்பரம் தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மேலும் 5 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியகருப்பண் பேசுகையில்,
காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.


திருச்செந்தூர், திருக்கோவிலூர், சுரண்டை, பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர், தாரமங்கலம், கூடலூர், காரமடை, அதிராம்பட்டினம், மானாமதுரை, முசிறி, இலால்குடி, கொல்லன்கோடு, உளுந்தூர்பேட்டை, வடலூர் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.
புகளூர் மற்றும் டிஎன்பிஎல் புகளூர் பேரூராட்சிகளை இணைத்து புகளூர் நகராட்சியாக அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
 

 

Tags :

Share via