கேஸ் கசிவால் தீ விபத்து - 2 பேர் உயிரிழப்பு
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அருகே சிலிண்டரை மாற்றும்போது கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட பார்த்தசாரதி, தனலட்சுமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தீக்காயம் அடைந்த கேஸ் ஏஜென்சி ஊழியருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் நாமக்கலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :