கோவிலில் மூலவரை படமெடுத்தவர் செல்போனை பிடுங்கி உண்டியலில் போட்ட பணியாளர்

by Editor / 23-03-2022 08:50:10am
கோவிலில் மூலவரை படமெடுத்தவர் செல்போனை பிடுங்கி உண்டியலில் போட்ட பணியாளர்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு  தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்த வடநாட்டு பக்தர் ஒருவர் தனது செல்போனில் மூலவரை படம் எடுக்க முயன்றுள்ளார். இதையடுத்து செல்போனை பிடுங்கிய கோயில் ஊழியர் அதனை உண்டியலில் போட்டுள்ளார். 

 இந்நிலையில் அந்த செல்போனில் தான் விமான டிக்கெட், ரயில் டிக்கெட் அனைத்தும் உள்ளதால் தான் ஊர் திரும்ப முடியாது என்று பதறிய அந்த பக்தரை சமாதானம் செய்த கோயில் அலுவலர்கள், நாளை உண்டியலில் உள்ள செல்போனை எடுத்து தருவதாக கூறி  யுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்கள் கைபை, செல்போன் உள்ளிட்ட எதனையும் கோயிலுக்குள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. இதனை கண்காணிக்கும் பணியில் உள்ள போலீஸாரின் சோதனையையும் மீறி செல்போனுடன் பக்தர் கோயிலுக்குள் சென்றது கேள்வியை எழுப்பியுள்ளது.

 

Tags : The person who filmed the source in the temple snatched the cell phone and put it in the piggy bank

Share via