ரூ. 2லட்சம் அபேஸ்: மர்மநபர்கள் கைவரிசை

by Staff / 04-11-2023 01:44:03pm
ரூ. 2லட்சம் அபேஸ்: மர்மநபர்கள் கைவரிசை

முதியவரிடம் ரூபாய் 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். ஆவடி அடுத்த திருநின்றவூர், கன்னடபாளையத்தை சேர்ந்தவர் சுதாகர்(65). ஓய்வுபெற்ற மாநகர போக்குவரத்து கழக ஊழியரான இவர், நேற்று முன்தினம் மதியம், திருநின்றவூர் கனரா வங்கியில், தன் கணக்கில் உள்ள பணத்தில், 2 லட்சம் ரூபாய் எடுத்துள்ளார். அதன் பின், அருகிலுள்ள மளிகை கடையில் உணவுப் பொருட்கள் வாங்கினார். அப்போது அவரிடம் வந்த, மர்ம நபர், பையில் இருந்து பணம் கீழே விழுந்துள்ளதாக திசை திருப்பியுள்ளார். அதை நம்பிய சுதாகர், கையில் இருந்த பணப்பையை தன் 'ஹோண்டா ஆக்டிவா' வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடி கம்பியில் மாட்டிவிட்டு, கீழே இறங்கி பணம் விழுந்துள்ளதா என பார்த்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர், பணப்பையை எடுத்துக் கொண்டு, மற்றொரு நபருடன் தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றார். இது குறித்து, திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via