பான் கார்டு கேட்டவருக்கு ரூ.3 கோடி வரி நோட்டீஸ்... உத்திரபிரதேசத்தில் பரபரப்பு...

by Admin / 25-10-2021 03:16:22pm
பான் கார்டு கேட்டவருக்கு ரூ.3 கோடி வரி நோட்டீஸ்... உத்திரபிரதேசத்தில் பரபரப்பு...

 

பான் அட்டை கேட்டவருக்கு ரூ.3 கோடி வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை

 உத்திர பிரதேசத்தில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளிக்கு 3 கோடி வரி செலுத்த கோரி வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரா மாவட்டம் பகல்பூர் என்னும் பகுதியில் வசிப்பவர் பிரதாப் சிங். ஆட்டோ ஓட்டும் தொழிலாளி. இந்த நிலையில் பான் அட்டை வேண்டி தனியார் சேவை மையத்தில் விண்ணப்பித்துள்ளார்.

நீண்ட போராட்டத்துக்கு பிறகு பான் அட்டை கைக்கு கிடைக்க கூடவே 3 கோடி ரூபாய் நிலுவை வரியையும் செலுத்துமாறு வருமான வரித்துறையினரிடம் இருந்து நோட்டீசும் வந்துள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள  பிரதாப் சிங் தனது நிலையை விவரித்து வீடியோ பதிவு ஒன்றையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via