சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின் சுவரை உடைத்து 6 பேர் தப்பி ஓட்டம்.

by Editor / 15-12-2022 10:12:43am
சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின் சுவரை உடைத்து 6 பேர் தப்பி ஓட்டம்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், கூர்நோக்கு இல்லத்தின் சுவரை உடைத்து 6 சிறுவர் தப்பியோடி, தடுக்க முயன்ற காவலாளியை கீழே தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதர்ஷ் நகரில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் 6 சிறுவர்கள் மையத்தின் சுவரில் துளையிட்டு தப்பினர். அங்கு பணியில் இருந்த பாதுகாவலரையும் கீழே தள்ளினர். தகவலின் பேரில் போலீசார் சிறுவர் இல்லத்தில் சோதனை நடத்தினர். தப்பி ஓடிய பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via