ரூ.300 கோடி சொத்துக்காக மாமனாரை கொன்ற மருமகள்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ரூ.300 கோடி சொத்தை அபகரிப்பதற்காக மருமகள் ஒருவர் தனது சொந்த மாமனாரை கொன்ற செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மே 22ம் தேதி மானேவாடா பகுதியில் புருஷோத்தம்(82) கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து புருஷோத்தமின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கிய போது, இறந்தவரின் மருமகள் அர்ச்சனா பணம் கொடுத்து,ஆட்களை ஏற்பாடு செய்து கார் விபத்தை ஏற்படுத்தி புருஷோத்தை கொன்றதாக தெரியவந்துள்ளது.
Tags :