நடுரோட்டில் தலை நசுங்கி உயிரிழந்த சிறுவன்

by Staff / 17-04-2024 04:14:31pm
நடுரோட்டில் தலை நசுங்கி உயிரிழந்த சிறுவன்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சதீஸ்குமார் என்பவர் தனது மகன் பிரவீஸ் (6) உடன் பைக்கில் சென்ற போது பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து பைக் மீது வேகமாக மோதியதில் பிரவீஸ் தலை நசுங்கி உயிரிழந்தான். படுகாயமடைந்த சதீஷ்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பேருந்து ஓட்டுநர், மதுபோதையில் இருந்ததாக குற்றம்சாட்டிய மக்கள் பேருந்துகளை சிறைபிடித்து போராடினர். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததால் கலைந்துச் சென்றனர்.

 

Tags :

Share via

More stories