அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் கடிதம்

by Staff / 22-09-2023 12:24:00pm
அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் கடிதம்

அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கக்கோரி செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பேரவை செயலாளருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அருகில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பதை மாற்றக் கோரி அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் 9ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடும் என்று சபாநாயகர் அப்பாபு அறிவித்திருந்தார். இந்த சூழலில், அதிமுக சார்பில் எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அதனால் அவர் தான் அந்த இருக்கையில் அமரவைக்கப்பட வேண்டும் என மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

Tags :

Share via