ஓமலூர் அருகே தோட்டத்தில் இறந்து கிடந்த 9 மயில்கள்
ஓமலூரை அடுத்த உ. மாரமங்கலம் புதூர் பகுதியில் விவசாய தோட்டத்தில் 9 மயில்கள் வெவ்வேறு இடங்களில் இறந்து கிடந்தன. தகவல் அறிந்த காப்புக்காடு வனவர் வீரக்குமார், வனக்காப்பாளர் சாரதி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.அப்போது 5 பெண் மயில்கள், 4 ஆண் மயில்கள் என 9 மயில்கள் அந்த பகுதியில் ஆங்காங்கே இறந்து கிடந்தன. தகவல் அறிந்த ஓமலூர் தாசில்தார் வல்ல முனியப்பன் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். டேனிஷ்பேட்டை வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த மயில்கள் எப்படி இறந்தன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 9 மயில்களும் ஒரே நேரத்தில் இறந்து கிடப்பதால் விஷம் வைத்து அவை கொல்லப்பட்டு இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :