கேரளாவில் ஏ.டி.எம்களில் கொள்ளை- காவல்துறையினார் மடக்கிப் பிடித்தனா்.

by Admin / 27-09-2024 12:34:56pm
கேரளாவில் ஏ.டி.எம்களில் கொள்ளை- காவல்துறையினார் மடக்கிப் பிடித்தனா்.

கேரளாவில் ஏ.டி.எம்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை கண்டெய்னர் லாரி மூலம் குமாரபாளையம் அருகே எடுத்துச் சென்றபோது காவல்துறையினார் மடக்கிப் பிடித்தனா்.. ஆறு பேர் கொண்ட கொள்ளை கும்பலில் ஒருவன் துப்பாக்கி சூட்டிற்கு பலியானான்.. காலை, நாமக்கல்லில் இருந்து சென்ற கண்டைனர் லாரி தாறுமாறாக ஓடியதில் எதிரே வந்த இ ருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகி விட்டு கண்டெய்னர்.அதி வேகமாக எடுத்துச் சென்ற பொழுது காவல்துறையினர் குமாரபாளையம் அருகே உள்ள சன்னியாசி பட்டியில் மடக்கி பிடித்து டிரைவரிடம் விசாரித்ததில் கண்டெய்னர் உள்ளே ஆறு பேர் கொண்ட கொள்ளை கும்பல் இருந்ததும் 60 லட்சத்திற்கு மேற்பட்ட பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணையில் அவர்கள் கேரளாவில் ஏடிஎம்மில் கொள்ளை அடித்து ராஜஸ்தானுக்கு செல்வதாக தகவல்களை வழங்கினார்.. இதை அடுத்து அவர்கள் காவல்துறையிடம் இருந்து தப்பிக்கும் பொழுது துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்ஒருவன் தப்பியோட்டம், .பின்பு 4 பேர் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via