அந்தரத்தில் கவிழ்ந்த கார் 3 பேர் பலி

by Staff / 18-10-2022 10:36:32am
அந்தரத்தில் கவிழ்ந்த கார்  3 பேர் பலி

சென்னை கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர்கள் ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு. சகோதரர்களான இருவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள். நேற்று இவர்களுடன் சேர்ந்து மொத்தம் 5 பேர் காரில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மலையம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் காரில் பயணம் செய்த ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு, சுதாகர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via