சாலைக்கு கொடி காத்த குமரன் பெயர் - முக.ஸ்டாலின் அறிவிப்பு

by Editor / 06-10-2021 10:38:35am
சாலைக்கு கொடி காத்த குமரன் பெயர் - முக.ஸ்டாலின் அறிவிப்பு

ஈரோட்டில் உள்ள சாலைக்கு கொடி காத்த குமரனின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திருப்பூர் குமரன் பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள சம்பத் நகர் பிரதான சாலையில் தியாகி குமரன் சாலை சம்பத் நகர் என பெயரிட்டு அக்டோபர் 3ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட அரசு உத்தரவை அமல்படுத்தினார்.

குமரன் நொய்யல் ஆற்றங்கரையில் 1932ஆம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி அன்று நடந்த ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஆங்கிலேயர் நடத்திய தாக்குதலில் குமரன் பலத்த காயம் அடைந்தும் கூட தன் உயிர் பிரியும் வரை இந்தியக் கொடியை கீழே விடாமல் உயர்த்திப் பிடித்துக் கொண்டு இருந்ததால் அவருக்கு கொடிகாத்த குமரன் என்று பெயர் சூட்டப்பட்டடுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via