சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபர் போக்சோ வழக்கில் கைது

by Staff / 02-06-2024 04:25:34pm
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபர் போக்சோ வழக்கில் கைது

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (27), இவர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக், 7 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கார்த்திக்கை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via