கணவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டி 1 வருடமாக பாலியல் தொல்லை

by Staff / 04-03-2024 05:15:40pm
 கணவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டி 1 வருடமாக பாலியல் தொல்லை

மத்தியப் பிரதேசத்தில் நடந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு திருமணமான 26 வயது பெண் வீட்டில் தனிமையில் இருக்கும் சமயங்களில் ராகேஷ் ஜாதவ் என்ற நபர் அங்கு சென்று அப்பெண்ணின் கணவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டி ஒரு வருடமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் பயத்தில் இதுபற்றி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இறுதியாக, அவர் தனது தாய் மற்றும் சகோதரரிடம் தெரிவித்து அவர்களுடன் சென்று போலீசில் புகார் நேற்று அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via