காதலியின் கண் எதிரே ரவுடி வெட்டிக் கொலை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரில் நாகூர் மீரான் வசித்து வந்துள்ளார். இதில் ரவுடியான இவர் காங்கிரஸ் கட்சியில் இளைஞர் அணி துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள தனது காதலி வீட்டிற்கு இவர் சென்றுள்ளார். இது குறித்து அறிந்த எதிர்தரப்பை சேர்ந்த மற்றொரு ரவுடி கும்பல் திடீரென காதலியின் வீட்டிற்குள் புகுந்து நாகூர் மீரானை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த நாகூர்மீரான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை கண்ட காதலி அலறியடித்து வெளியே ஓடி விட்டார். மேலும் கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விரைந்து சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து இந்த கொலை தொடர்பாக அதே பகுதியில் வசித்து வரும் பிரபாகரன் உட்பட 5 பேரும் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். மேலும் அவர்களிடம் காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :