தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா நியமனம்
தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சி விதியில் திருத்தம் கொண்டுவரப்பட்டு பொருளாளராக இருக்கும் பிரேமலதாவிற்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுகிறது. இதனை அக்கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்த பொதுக் குழுவில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றுள்ளதால் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். விஜயகாந்தை பார்த்ததும் தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். மருத்துவ சிகிச்சைக்கு பிறகு முதல்முறையாக கட்சி நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :