by Editor /
03-07-2023
11:53:28pm
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான செந்தில்பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறதுஎன தகவல் வெளியாகியுள்ளது.
Tags :
Share via