நீதிமன்றத்திற்குள் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு

by Staff / 23-03-2023 02:07:08pm
நீதிமன்றத்திற்குள் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு

கோவையை சேர்ந்த சிவக்குமார், கவிதா தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி கவிதா கணவர் மீது புகார் தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே.எம் 1 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று வழக்கு விசாரணைக்காக தம்பதியினர் வந்திருந்த நிலையில் இருவரும் காத்திருப்பாளார்கள் பகுதியில் காத்திருந்துள்ளனர். அப்போது சிவக்குமார் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கவிதாவின் மீது வீசியுள்ளார். அது கவிதாவின் உடலில் பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்த வழக்கறிஞர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

 

Tags :

Share via