கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு- பயந்தோடிய மர்ம கும்பல்
மதுரையில் கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் சிறுவனைக் கடத்தி, ரூ.2 கோடி பணம் தரவில்லை என்றால் சிறுவனைக் கொலை செய்வோம் என்று மர்ம கும்பல் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அக்கும்பலின் எச்சரிக்கையையும் மீறி, சிறுவனின் தாயார் போலீசில் புகாரளித்துள்ளார். பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் சிறுவனை 4 வழிச்சாலையில் இறக்கிவிட்டு அக்கும்பல் காரில் தப்பி ஓடியுள்ளது. இதையடுத்து, தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags :